Ad Code

Responsive Advertisement

தேர்தல் பயிற்சி வகுப்பை புறக்கணித்த ஆசிரியர்கள்!

மதுரையில் சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத ஆசிரியர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வீரராகவராவ் எச்சரித்துள்ளார்.தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஏப்.,24ல் நடந்தது.


இதில் பல ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை. இவர்கள் தங்களது தேர்தல் அதிகாரிகளிடம் அதற்கான தகுந்த விளக்கத்தை மே 3க்குள் (நாளை) அளிக்க வேண்டும்.



இல்லாதபட்சத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 136ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement