தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் எம்.கலைச்செல்வி தாக்கல் செய்த மனுவில், "தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்படும் பெண் காவலர்களுக்கு நடமாடும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், எஸ்.விமலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆர்.நிரஞ்சன், "வாக்குச்சாவடிகளில் குறைந்தபட்சமாக குடிநீர், கழிவறை உள்ளிட்ட 7 அடிப்படை வசதிகளை அமைத்து கொடுக்க அடையாளம் கண்டுள்ளது. அருகிலுள்ள வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்பட்ட கழிப்பிட வசதியை பெண் காவலர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். சுமார் 65,512 வாக்குச் சாவடிகளில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன' என்றார்.
தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்கள், காவலர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும். தேர்தல் ஆணையம் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவில்லை என்று நாங்கள் கூறியதாக கருதக் கூடாது என்றனர். இதையடுத்து, வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை