தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தங்களது தபால் ஓட்டுக்களை இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை பதிவு செய்யலாம். தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், ஆரம்ப சுகாதார ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டள்ளனர்.
போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று முதல் தபால் ஓட்டுக்களை போடலாம்.சென்னையில் 16 தொகுதிகளிலும் உள்ள 3,770 வாக்குச்சாவடிகளில் 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக பணியில் உள்ளனர். இதைதவிர 16 ஆயிரம் போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் செய்துள்ளார்.
அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலகங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த முகாம்களிலேயே அவர்கள் வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்காக போலீஸ் பாதுகாப்புடன் தனி அறை உருவாக்கப்பட்டுள்ளது. தபால் ஓட்டுக்கான படிவம் 12-ஐ பூர்த்தி செய்து பயிற்சி அலுவலர்கள் மூலமாக அரசு ஊழியர்கள் தங்களது வாக்குகளை 14-ந் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் கூறும் போது, “தபால் ஓட்டுக்களை போடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு பதிவுக்கு முந்தைய நாளான 15-ந் தேதி அன்று இரவே தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் வாக்குபதிவு மையங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை