புதிய
கல்வியாண்டில்
பதிய
காத்திருக்கும்
ஆசிரிய ஏணிகளே!
மாணவ
கூட்டங்களை
கரைசேர்க்க
காத்திருக்கும்
தோணிகளே!
இருக்கும்
பிள்ளைகளை
ஈன்ற
பிள்ளைகளாய்
பாருங்கள்
கற்பித்தல்
சுகமாகும்!
பெற்றோர்கள்
சுவாசிக்க
காற்று கொடுக்க..
நாமோ
வாசிக்க
கற்றுக்கொடுக்கும்
வாத்தியார்கள்..
கடந்த கால
தேர்ச்சி
விழுக்காட்டில்
விழுந்து கிடக்காமல்
புதிய தேர்ச்சிக்காக
எழுந்து நில்லுங்கள்.
கடந்த கால
கசப்புகளை
கசக்கி எறியுங்கள்
பாகற்காய் கூட
பால்கோவா
ஆகும்.
இந்த
சமூகம் நம்மை
மதிக்காமல் இருக்கலாம்
ஆனால் நாம்
சமூகத்தை
மதித்தாகவேண்டும்.
அப்போதுதான்
நாம்
முழு முதல்
ஆசிரியராகிறோம்.
ஏழையைத்
தூக்கி விடும்
ஏகலைவன் நாம்.
பாமரனை
பண்படுத்தும்
பகலவன் நாம்.
கரடு முரடு
கல்லையும
சிலையாக்கும்
சிற்பி நாம்.
மாணவனின்
நடவடிக்கை
நம்மை
சினம் கொள்ளத்
தூண்டும்.
கோபம் மட்டும்
கொடி
பிடிக்க கூடாது.
மாணவன் நம்மை
எதிரியாய்ப்
பார்க்கலாம்
நாம்
மாணவனை
மகனாகப்
பார்க்கலாமே.
கடமையில்
குறை வேண்டாம்
காலத்தில்
தாமதம் வேண்டாம்
கற்பித்தலில்
தயக்கம் வேண்டாம்.
நாம்
நம்மில் உள்ள
நம்பிக்கையை
நம்புவோம்.
இந்தாண்டு
நல்ல ஆசிரியராக
நல்ல மனிதர்களை
உருவாக்கிய
நாயகனாகண
நீங்கள்
மாற்றம் பெற்று
கல்விக்கடவுளாக
வலம் வர
உளமார
வாழ்த்துகிறோம்.....
கல்வியாண்டில்
பதிய
காத்திருக்கும்
ஆசிரிய ஏணிகளே!
மாணவ
கூட்டங்களை
கரைசேர்க்க
காத்திருக்கும்
தோணிகளே!
இருக்கும்
பிள்ளைகளை
ஈன்ற
பிள்ளைகளாய்
பாருங்கள்
கற்பித்தல்
சுகமாகும்!
பெற்றோர்கள்
சுவாசிக்க
காற்று கொடுக்க..
நாமோ
வாசிக்க
கற்றுக்கொடுக்கும்
வாத்தியார்கள்..
கடந்த கால
தேர்ச்சி
விழுக்காட்டில்
விழுந்து கிடக்காமல்
புதிய தேர்ச்சிக்காக
எழுந்து நில்லுங்கள்.
கடந்த கால
கசப்புகளை
கசக்கி எறியுங்கள்
பாகற்காய் கூட
பால்கோவா
ஆகும்.
இந்த
சமூகம் நம்மை
மதிக்காமல் இருக்கலாம்
ஆனால் நாம்
சமூகத்தை
மதித்தாகவேண்டும்.
அப்போதுதான்
நாம்
முழு முதல்
ஆசிரியராகிறோம்.
ஏழையைத்
தூக்கி விடும்
ஏகலைவன் நாம்.
பாமரனை
பண்படுத்தும்
பகலவன் நாம்.
கரடு முரடு
கல்லையும
சிலையாக்கும்
சிற்பி நாம்.
மாணவனின்
நடவடிக்கை
நம்மை
சினம் கொள்ளத்
தூண்டும்.
கோபம் மட்டும்
கொடி
பிடிக்க கூடாது.
மாணவன் நம்மை
எதிரியாய்ப்
பார்க்கலாம்
நாம்
மாணவனை
மகனாகப்
பார்க்கலாமே.
கடமையில்
குறை வேண்டாம்
காலத்தில்
தாமதம் வேண்டாம்
கற்பித்தலில்
தயக்கம் வேண்டாம்.
நாம்
நம்மில் உள்ள
நம்பிக்கையை
நம்புவோம்.
இந்தாண்டு
நல்ல ஆசிரியராக
நல்ல மனிதர்களை
உருவாக்கிய
நாயகனாகண
நீங்கள்
மாற்றம் பெற்று
கல்விக்கடவுளாக
வலம் வர
உளமார
வாழ்த்துகிறோம்.....
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை