பாரதியார் பல்கலையில் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடக்கும் முதுகலை படிப்புக்கு வரும், 31ம் தேதி வரையும், நேரடி சேர்க்கை படிப்புக்கு ஜூன், 15ம் தேதி வரையும் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.பாரதியார் பல்கலையில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க நேற்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், மாணவர்கள் நலன்கருதி நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடக்கும் முதுகலை படிப்புக்கு வரும், 31ம் தேதி வரையும், நேரடி சேர்க்கைக்கான படிப்புக்கு ஜூன், 15ம் தேதி வரையும் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.மாணவர்கள், www.bu.ac.in என்ற பல்கலை இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பூர்த்திசெய்த விண்ணப்பத்துடன், விண்ணப்ப கட்டணமாக இதர பிரிவினர், 300 ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், 150 ரூபாய்க்கான டி.டி., அல்லது பாங்க் ஆப் இந்தியா ரசீதுடன் இணைத்து சம்பந்தப்பட்ட துறை தலைவரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும். இறுதி பருவத்தேர்வெழுதியுள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அச்சிடப்பட்ட விண்ணப்பங்களை பல்கலையில்பெற உரிய விண்ணப்ப கட்டணத்தை டி.டி., அல்லது பாங்க் ஆப் இந்தியா ரசீதாக செலுத்தி நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பதிவாளர், பாரதியார் பல்கலை என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., பாட மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலையில் கலந்தாய்வு மூலம் நடக்கிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை