பிளஸ் 2 தேர்வில், இந்த ஆண்டு மாவட்ட அளவிலான தேர்ச்சியில், ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. வேலுார் மாவட்டம், கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.


வழக்கமாக முதல் இடத்தை பிடிக்கும் விருது நகர் மாவட்டம், இரண்டு ஆண்டகளாக அதை தவறவிட்டுள்ளது. இதே போல், 100 சதவீத தேர்ச்சி பெறும் கன்னியாகுமரி மாவட்டமும், பின்னடைவை சந்தித்து, 95.70 சதவீத தேர்ச்சியே பெற்றுள்ளது. தஞ்சை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களும் தேர்ச்சி சதவீதத்தில் பின் தங்கியுள்ளன.