ஜிப்மரில், பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, வரும் ஜூலை மாதம், 10ம் தேதி நடக்கிறது.புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், நர்சிங் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் ஒட்டு மொத்தமாக, 154 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்பங்கள், இணையதளத்தில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
ஜூன், 8ம் தேதி, மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஹால் டிக்கெட்டுகளை, ஜூன், 29ம் தேதி முதல் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
நுழைவுத்தேர்வு: நர்சிங் நுழைவுத் தேர்வு, ஜூலை 10ம் தேதி காலை, 10:00 மணி முதல், 11:30 மணி வரை, சென்னை, புவனேஸ்வர், காந்தி நகர், ஜம்மு, மும்பை, புதுச்சேரி, ராஞ்சி, திருவனந்தபுரம், சோனிபட் உள்ளிட்ட இடங்களில் நடக்கிறது. நுழைவுத் தேர்வு, 90 நிமிடங்களுக்கு நடக்கும்.
பொது, ஓ.பி.சி., பிரிவினருக்கு 600 ரூபாய், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு 400 ரூபாய் கட்டணம். மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டண விலக்கு உண்டு. மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய மருத்துவச் சான்றிதழ்களை, விண்ணப்பத்துடன் இணைத்து, ஜூன், 26ம் தேதிக்குள், பதிவாளர், ஜிப்மர் நிர்வாக கட்டடம், புதுச்சேரி - 605 006 என்ற முகவரிக்கு அனுப்பி, கட்டண விலக்கு பெறலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை