பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 31-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பிஇ, பிடெக் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைன் பதிவு ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் பதிவு செய்வதற்கு கடைசி நாள் மே 24-ம் தேதி என்றும், பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க கடைசி நாள் மே 27-ம் தேதி என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கும், அதேபோல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசி தேதி மே 31-ம் தேதி வரையும், அதேபோல், விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜுன் 4-ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை