பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே வெளியிட்ட அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த 17-ம் தேதி காலை 10.31 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த முடிவுகளை, அரசு தேர்வுத்துறை மூலம் பத்திரிகைகளுக்கு வழங்கவும். அதேநேரத்தில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் எல்லா பள்ளிகளுக்கும் வழங்கப்பட்ட பிளஸ் 2 தேர்வுமுடிவு வெளியிடப்பட்டது.இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே, ஊடகங்களில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கசியத் தொடங்கியது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. விசாரணையில், கிருஷ்ணகிரியில் பணியாற்றும் அரசு ஊழியரானமாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் தான் பிளஸ் 2 முடிவுகளை கசிய விட்டார் என்பது தெரியவந்துள்ளது.
அதனையடுத்து, மகேந்திரன் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை