தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 164 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என புதிய தலைமுறை ஆப்ட் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.
தமிழகம் முழுவதும் 5 மண்டலங்களாக பிரித்து 200 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் மொத்தம் 4ஆயிரத்து 992 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் முடிவுகளில், அதிமுக 164 இடங்களில் வெற்றி பெறும் என்றும், திமுக 66 இடங்களைப் பிடிக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
மற்ற கட்சிகளுக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. எந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு அதிமுகவுக்கு 38 புள்ளி 58 சதவிகிதம் பேரும், திமுகவுக்கு 32 புள்ளி 11 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர். தேமுதிக கூட்டணிக்கு 8 புள்ளி 55 சதவிகிதமும், பாமகவுக்கு 4.47 சதவிகிதமும், நாம் தமிழர் கட்சிக்கு 2 புள்ளி 12 சதவிகிதமும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
பாரதிய ஜனதா 1 புள்ளி 96 சதவிகிதமும், தெரியாது என்று 8 புள்ளி 45 சதவிதமும் பதிலாகக் கிடைத்தன. எந்தக் கட்சி நிலையான ஆட்சியைத் தரும் என்ற கேள்விக்கு, ஆய்வில் பங்கேற்றவர்களில் 37 புள்ளி 96 சதவிகிதத்தினர் அதிமுகவை தேர்வு செய்தனர். 31 புள்ளி 33 சதவிகிதம் பேர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தேமுதிக கூட்டணிக்கு 7 புள்ளி 67 சதவிகிதமும், பாமகவுக்கு 4 புள்ளி 27 சதவிகிதமும் ஆதரவு கிடைத்தது.எனினும், மீண்டும் ஆட்சி அமைக்க அதிமுகவுக்கு வாய்ப்பளிப்பீர்களா என்ற கேள்விக்கு 51 புள்ளி 68 சதவிகிதம் பேர் இல்லை என்றும், 42 புள்ளி 69 சதவிகிதத்தினர் ஆம் என்றும் பதிலளித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை