Ad Code

Responsive Advertisement

ஓய்வு பெற்ற அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் 101வது பிறந்த நாள் விழா

ஓய்வு பெற்ற அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் தன், 101வது பிறந்த நாளை, நேற்று கொண்டாடினார். இதில், அவரது நான்கு தலைமுறை உறவினர்கள் பங்கேற்றனர். சேலம் மாவட்டம்,குட்டப்பட்டி அடுத்த சீராம்பட்டியைச் சேர்ந்தவர், மாணிக்கம், 101; ஓய்வு பெற்ற அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர். அவரது மனைவி முத்தம்மாள், இறந்துவிட்டார்.


இவர்களுக்கு, கண்ணுசாமி, நடேசன், ராஜரத்தினம், சுந்தரராஜன் ஆகிய மகன்களும், மாதேஸ்வரி, மனோரஞ்சிதம் ஆகிய மகள்களும் உள்ளனர். அய்யாசாமி என்ற மகன், இறந்துவிட்டார்.


சீராம்பட்டியில், மகன் குடும்பத்துடன் வசிக்கும் மாணிக்கம், நேற்று தன், 101வது பிறந்த நாளை, கேக் வெட்டி கொண்டாடினார். இதில், மாணிக்கத்தின் மகன்கள், மகள்கள், பேரன், பேத்தி கள், கொள்ளு பேரன், பேத்திகள் உள்ளிட்ட நான்கு தலைமுறையினர் பங்கேற்றனர்.
மாணிக்கம் கூறுகை யில், ''வயதான பெற்றோரை மகன்கள் ஒதுக்கி வைக்கக் கூடாது. மனதில் கவலைகள் இன்றி, குடும்பத்தினருடன் நிம்மதியாக இருந்தால் நீண்ட நாட்கள் வாழலாம்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement