சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ம் தேதி வெளியாகின்றன. இது ஹரியாணா மாநிலத்துக்கான ஆசிரியர் தகுதித் தேர்வாகும். இந்தத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. அப்போது ஹரியாணா நிலத்தில் நிர்வாகக் கோளாறு காரணமாக இந்தத் தேர்வு நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து ஹரியாணா மாநிலத்துக்காக தனியாக மே 8-ம் தேதி இந்தத் தேர்வுகளை நடத்தவுள்ளது சிபிஎஸ்இ.
ஹரியாணா மாநிலத்தில் அம்பாலா, பரீதாபாத், குர்காவ்ன், குருஷேத்ரா, பஞ்சகுலா ஆகிய நகரங்களில் தேர்வுகள் நடைபெறும்.
இதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ சிடிஇடி 10-வது பதிபுத் தேர்வு வரும் செப்டம்பர் 18-ம் தேதி நடைபெறவுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை