வாட்ஸ்ஆப் செயலி இந்தியாவில் தடை செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இப்படி செய்யப்படலாம் என கூறப்படுகிறது.வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது செயலியில் சமீபத்தில் சில மாற்றங்களை செய்தது. இந்த மாற்றங்கள், இந்திய தொலைதொடர்பு சட்ட விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் இந்த செயலி இந்தியாவில் தடை செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் சமீபத்தில் செய்த மாற்றங்கள் காரணமாக, இந்த செயலி மூலம் அனுப்பப்படும் செய்தியை அனுப்புபவர் மற்றும் பெறுபவர் தவிர மற்ற யாரும் படிக்க முடியாது. . வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் செய்திகளை, சைபர் குற்றவாளிகள், ஹேக்கர்கள், ஏன், நாங்கள் கூட பார்க்க முடியாது என வாட்ஸ்ஆப் செயலியை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இந்திய சட்டப்படி இணையதளம் சேவைகளை 40 பிட் என்கிரிப்சன் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதற்கு மேல் அவர்கள் பயன்படுத்த வேண்டுமானால் இந்திய அரசின் அனுமதி பெற வேண்டும். ஆனால்அரசின் அனுமதி கிடைப்பதில் சிரமம் உள்ளது. இந்திய அரசின் அனுமதி பெற வேண்டுமானால், வாட்ஸ்ஆப் நிறுவனம், செயலியில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்த முக்கிய தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். வாட்ஸ்ஆப் இதனை செய்யாது என்றே தெரிகிறது. மறைமுகமாக, அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவது சட்டவிரோதம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை