மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு, பொது நுழைவுத் தேர்வுக்கான தடையை தொடர, புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா, கவர்னருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2008ம் ஆண்டு மத்திய அரசு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்தி, மருத்துவம் மற்றும் பொறியியல் சேர்க்கை நடத்த முயன்றது. அதை எதிர்த்து ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, நுழைவு தேர்வுக்கு கோர்ட் தடை விதித்தது.இந்நிலையில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்திற்கு, நுழைவு தேர்வுக்கான தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கியுள்ளது. இதனால், பின்தங்கிய ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்டுவர்.
புதுச்சேரியில் உயர் கல்வி மாணவர் சேர்க்கைக்கான 69 சதவீத ஒதுக்கீடு பாதிக்கப்படும். ஏற்கனவே புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 23 இடங்களும், மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லூரியில் 6 இடங்களும் மத்திய அரசுக்காக ஒதுக்கப்படுகிறது.எனவே, புதுச்சேரி அரசு, சுப்ரீம் கோர்ட் நீக்கியுள்ள தடை ஆணையை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை