தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் எஸ்.எஸ்.திலகர் சென்னையில், நேற்று கூறியதாவது:மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், வெளியிடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில், தமிழகத்தில், ஒரு தனியார் பல்கலைக் கழகம் உட்பட, 13 பல்கலைக் கழகங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
அவற்றில், அரசு நிறுவனங்களில் இரண்டாவது இடத்தை, தமிழ்நாடு கால்நடை பல்கலைக் கழகம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.மத்திய அரசு, முதன்முறையாக வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், தேசிய அளவில், 36வது இடத்தை பிடித்திருப்பது, இப்பல்கலைக் கழகத்தின் தரத்துக்கு சான்று. இந்தாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பம், ஜூன் முதல் வாரத்தில் துவங்கி, ஒரு மாத காலம் வரை, 'ஆன்லைனில்' கிடைக்கும். இந்தாண்டு முதல், புதுக்கோட்டை மண்டல ஆய்வு மையத்தில்,பாலிடெக்னிக் வகுப்புகள் துவங்கப்படுகின்றன. கறவை மாடு, ஆடு, பசு, கோழி, பன்றி, வான் கோழி வளர்ப்பு முறை பற்றிய, ஓராண்டு டிப்ளமோ படிப்பு, அங்கு பயிற்றுவிக்கப்படும். அதற்கான மாணவர் சேர்க்கை, ஆகஸ்டில் துவங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பல்கலைக் கழக பதிவாளர் டி.ஜே.ஹரிகிருஷ்ணன், உடன் இருந்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை