''அனிமேஷன் துறை படிப்புகளை தேர்வு செய்தால் படிக்கும் போதே வேலைவாய்ப்பு தேடி வரும்,'' என, மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,) அனிமேஷன் துறைத் தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.மதுரையில் தினமலர் சார்பில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் 'அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங்' குறித்து அவர் பேசியதாவது:
ஊடகத் துறையில் பிரம்மாண்டத்தை கண்முன் கொண்டு வர அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பிற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றால் போதும். வித்தியாசமாக சிந்திக்கும் திறன் மட்டும்தான் இதற்கு முதலீடு. தமிழகத்தில் அனிமேஷன் நிறுவனங்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து துறைகளிலும் அனிமேஷன் நுட்பம் தேவைப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.60 ஆயிரம் முதல் சம்பளம் பெறலாம்.
கிராபிக் டிசைன், வெப் டிசைன், பிரின்டிங் டிசைன், லோகோ டிசைன், பிரின்ட் அண்ட் பேக்கிங் டிசைன் என பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளில் படிக்கலாம்.
24 மணி நேரம் நிகழ்ச்சிகளை தரும் தொலைக்காட்சிகளில், பல நிகழ்ச்சிகளை வெளி நிறுவனங்கள்தான் தயாரித்து வழங்குகின்றன. இதன் மூலம் அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இருந்து கொண்டு இருக்கும். சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி போன்ற தரமான கட்டமைப்பு வசதிகள் உள்ள கல்லுாரிகளை தேர்வு செய்து மாணவர்கள் படிக்க வேண்டும். பெண்கள் இப்படிப்பை முடித்தால், இணையதள வசதியுடன் கம்ப்யூட்டர் இருந்தால் போதும், வீட்டில் இருந்தபடியே ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை