Ad Code

Responsive Advertisement

உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி ?




ஞாபகம் ஒரு வியாதி , மறதி ஒரு வரம் என்று  சொல்வார்கள்  ,
ஆனால்  நம் குழந்தை  படித்தததை  எல்லாம் மறுக்கும் போது  மறதி ஒரு சாபம் போல  நமக்கு தோன்றும் .


ஞாபகம்   குறித்து சில  தகவல்கள் :

நாம்  பார்க்கும்  , கேட்க்கும் , உணரும் , சுவைக்கும் , முகரும்  அனைத்துமே  நமது  ஞாபகங்கள்  ஆகும் .  இது முதலில் முதலில் குறைந்த  நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே  மறந்து விடும் .


இந்த சென்சரி  மெமரியில் நாம்  முழு கவனத்தை செலுத்தி  ஆழ்ந்து கவனித்தால்  அது ஷார்ட் டெர்ம் மெமரி  ஆக  பதிவாகும் .இதுவும்  சில மணித்துளிகளுக்கு  மட்டும்  இருக்கும் .



ஷார்ட் டெர்ம் மெமரி  ஐ திரும்ப திரும்ப  செய்யும்போது  அது நாள் பட்ட  ஞாபக சக்தியாக  மாறும் .


எனவே  ஞாபக சக்திக்கு  மிகவும் முக்கிமானது  இரண்டு :
                ஆர்வம் மற்றும்  கவனம்
                 திரும்ப திரும்ப செய்தல் .
மேலும்  நாள் பட்ட ஞாபகம்  கூட மறக்க  வாய்ப்பு  உள்ளது , இதுவும் நல்லது தான் . சில சமயம்  வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.
நாள் பட்ட ஞாபகத்தை  இரண்டு வகையாக  பிரிக்கலாம்  :
        


 explicit & implicit
explicit   என்பது  கொஞ்சம் யோசித்தால்  நினைவுக்கு  கொண்டுவர முடியும்
implicit என்பது  யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு  கொண்டு வருதல்
நினவு  திறனை  சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம் :
மிதி வண்டி ஓட்ட பழகுதலை    எடுத்துகொள்வோம்
  யாரோ ஓட்டுவதை  நாம் பார்ப்பது - சென்சரி மெமரி
  முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது  - ஷார்ட் டெர்ம் மெமரி
  தத்தி தத்தி ஓட்டுவது - லாங் டெர்ம்  explicit மெமரி
  தயவே இல்லாமல்  ஓட்டுவது -லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது )


இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்
1 . எதையும்  தாய் மொழியிலேயே  சிந்திக்க வேண்டும் , நீங்கள்  படிப்பது ஆங்கிலமோ , ஹிந்தியோ , பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ   அதில் சிந்தித்து  மனதில் பதிய செய்ய வேண்டும்
2 . புரியாமல்  எதையும் படிக்க கூடாது . ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும்  பரவாயில்லை .
3 . முழு கவனம்  மிக அவசியம் .
4 . mnemonics  வைத்து  படிப்பது ஒரு கலை . அதை உங்கள் குழந்தைக்கு  கற்று கொடுங்கள் உதரணம்  news - north ,east,west,south
5 . படித்த வுடன் எழுதி  பார்க்கும் பழக்கத்தை  ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில்  கடமைக்கு  எழுதும்  சடங்கு  பயனில்லை.
6 . படங்களுடன் கூடிய  தகவல்கள்  மனதில் பதியும் . பட விளக்கங்களை திரும்ப திரும்ப  வரைந்து பார்க்க சொல்லவேண்டும்
7 . நல்ல உறக்கம்  அவசியம் . குறைந்தது  8  மணி நேர தூக்கம்  கண்டிப்பாக தேவை
8 .இரவில்  சீக்கிரம்  தூங்கி  அதிகாலை  படிக்கும்  படி  சொல்லவேண்டும் .
9 . தூங்க போகும்  முன்  அன்று  படித்த  அனைத்தையும்  ஒரு முறை மேலோட்டமாக  நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும்   நம் மூளையின்  சில மூலைகள் விழிப்புடன் இருந்து  தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து  லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான  பயிற்சி ஆகும் .
10 . மாவு சத்து உள்ள உணவுகள்  மந்த நிலையை  ஏற்படுத்தும் , எனவே புரதம்  நிறைந்த எளுதில்  செரிக்கும்  உணவை செர்த்துகொள்வது நல்லது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement