கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு என்ற பெயரில்,குழந்தைகளை பள்ளியில் அனுமதிக்கக்கூடாது,என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி, கலெக்டர் மற்றும் தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். அக்கடிதத்தில் , நல்லசாமி கூறியிருப்பதாவது:
கறிக்கோழிகளை வளர்த்து பண்ணைக்கு அனுப்புவது போல,இந்தியாவில் பள்ளி,கல்லூரிகள் குழந்தைகளை படிக்க செய்து,வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறது. மூன்று வயதிலேயே உண்டு உறைவிடப்பள்ளியில் சேர்ப்பது, இன்றைய நாகரீகமாக உள்ளது. கோடை விடுமுறையில் கூட, வீட்டில் குழந்தைகளை இருக்க விடுவதில்லை. இதனால்,பல விவசாய குடும்பத்து குழந்தைகளுக்கு கூட காடு,விளை நிலம், ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பு போன்றவை அறிய வாய்ப்பின்றிபோகிறது. இங்கிலாந்தில், உலக போர்களுக்கு முன்பு வரை,அறுவடை காலங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடுவது வழக்கம். இதனால், இளமையிலேயே குழந்தைகள் விவசாயத்தை கற்றனர். பெற்றோருக்கு சுமை தாங்கியாக இல்லாமல் போனார்கள்.உலக போருக்குப்பின், இந்நடைமுறை எல்லா இடங்களிலும் மாறிவிட்டது. புற்றீசல் போல கோடை விடுமுறை பயிற்சி களங்கள், சிறப்பு வகுப்புகள்,விளையாட்டு பயிற்சி கூடங்கள் என அதிகரித்து விட்டன. இதனால்,குழந்தைகளின் ஓய்வு தேவையும் பாழாகிவிடுகிறது.எனவே,நமது மரபை காக்கவும், குழந்தைகளின் ஆரோக்கியம் கருதியும்,இதுபோன்ற கோடை விடுமுறை பயிற்சிகளை தடை செய்யவேண்டும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை