1. அரசு ஊழியர்கள் /ஆசிரியர்கள் வேறு எவ்வித தொழிலையும் முழு நேரமாகவோ பகுதி நேரமாகவோ செய்யக் கூடாது.
2. சமூக பணிகள், இலக்கியம், அற இயல்புடைய பணிகள், கலைப் பணிகள், அறிவியல் பணிகள் ஆகியவற்றில் அலுவலக/பள்ளி பணிக்கு ஊறு நேராமல் ஈடுபடலாம்.
3. மத்திய /மாநில அரசுகளின் கொள்கைகள், நடைமுறைகள், உறவுகள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் கூடாது.
4. அரசியல் கட்சிகள் எதிலும் உறுப்பினராக சேரக் கூடாது. தேர்தல் தொடர்பான வேலைகளில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் சார்பாக ஈடுபடக்கூடாது.
5. ஜாதி, மத சார்பான அமைப்புகளில் சேரவோ, அதன் நடவடிக்கையில் பங்களிப்பு செய்யவோ கூடாது.
6. அரசின் நடவடிக்கை குறித்து தனிப்பட்ட முறையில் பேட்டி, கட்டுரை முதலான வடிவில் விமர்சனம் கூடாது.
7. தனது பணிகள் சார்ந்த நன்மைகளுக்கு அரசியல் தலைவர்களைப் பயன்படுத்தக்கூடாது. மேலதிகாரிகளுக்கு அவர்கள் மூலம் நிர்பந்தம் செய்யக்கூடாது.
8. உயர் அலுவலர்களின் எழுத்து வாயிலான ஆணையை மறுப்பின்றி நிறைவேற்ற வேண்டும்.
9. அசையும் /அசையா சொத்துக்களை வாங்கவும் விற்கவும் துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும்.
10. கிரிமினல் குற்றங்களில் ஈடுபடக் கூடாது. துறை அனுமதி இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளக் கூடாது..
அன்பிற்குரிய நண்பர்களே....
இது தேர்தல் காலம். நாம் தெரிந்தோ, தெரியாமலோ பல்வேறு கார்டூன் படங்கள் /விமர்சனம் பதிவிடுகிறோம் அல்லது forward செய்கிறோம். இதில் எல்லை மீறாமல் கருத்து /விமர்சனம் பதிவு செய்வோமாக.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை