பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 'புளூபிரின்ட்' படி கேட்கப்படாததால், நுாறு மதிப்பெண் எடுப்பது கடினம்,' என, மாணவர்கள் தெரிவித்தனர்.வினாத்தாள் தொடர்பாக விருதுநகர் மாவட்டமாணவர்கள் கூறியதாவது:
ஆர்.ரத்தினமணி, ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி,விருதுநகர்: வினாக்கள் எளிதாக இருந்தன. 5, 10 மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள் நேரடி வினாக்களாக இருந்ததால் வேகமாக பதில் எழுத முடிந்தது.புத்தகம், வெளியில் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது.ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு மட்டும் யோசித்து பதிலளிக்க வேண்டியிருந்தது. தேர்ச்சி எளிது.
எம்.ஸ்டெல்லா, ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி, சிவகாசி: ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாகவும், 5 மதிப்பெண் வினாக்கள்எளிதாகவும் இருந்தன. பாடங்களை வரிவிடாமல் படித்திருந்ததால் 10 மதிப்பெண் வினாவிற்கு எளிதாக பதில் எழுத முடிந்தது. வினாக்கள் நுணுக்கமாக இருந்தன.ஒருமதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்ததால் 'சென்டம்' எடுப்பது கஷ்டம்.
அஜித்குமார், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி காரியாபட்டி: அடிக்கடி கேட்கப்பட்ட வினாக்களாகவே இருந்தன. இந்த வினாக்களுக்கு ஆசிரியர்கள் முக்கியத்துவம் கொடுத்து படிக்க வைத்ததால், மனதில் நன்றாக பதிந்து இருந்தது. அனைவருமே நல்ல மதிப்பெண்கள்எடுப்பார்கள். கடைசி தேர்வை திருப்தியாக, முழுமையாக எழுதியதில் மகிழ்ச்சி.
டி.சங்கரலிங்கம்,ஆசிரியர், கே.வி.எஸ். மெட்ரிக் பள்ளி, விருதுநகர்: ஒரு மதிப்பெண் வினாக்களில் 7, 17, 20ம் வினாக்கள் தான் சிந்தித்து எழுதும் வகையில் இருந்தன.3, 5, 10 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. 10 மதிப்பெண் வினாக்களில் நான்கில் மூன்று வினாக்களை அனைத்து மாணவர்களும் எளிதில் எழுதிவிடலாம். ஒரு மதிப்பெண் வினாக்களில் கேட்கப்பட்ட கணக்குகள் மட்டும் 'புளூ பிரின்ட்' படி இல்லை. புளூ பிரின்ட் படி 3 ,5 , 8வது பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட வேண்டும். ஆனால் 1வது பாடத்தில் இருந்து ஒரு மதிப்பெண் கணக்கு வினா கேட்கப்பட்டது. ஒரு மதிப்பெண் வினாக்களால் நுாறு மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும். பிற வினாக்கள் மிக எளிது. இவ்வாறுகூறினர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை