துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வு அறை கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியர் மயங்கிவிழுந்ததில் இறந்தார். பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொருளியல் தேர்வு, நேற்று காலை நடந்தது.
திருச்செந்துார், செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு அறை கண்காணிப்பாளராக, சுந்தர், 48, நியமிக்கப்பட்டு இருந்தார். இவர், உடன்குடியிலுள்ள, டி.டி.டி.ஏ., மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.காலை 9:50 மணிக்கு, மாணவர்களுக்கு வினாத்தாள்களை சரி பார்த்து வழங்கும் பணியை செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. தேர்வு அறையில் இருந்த மாணவர்கள், பக்கத்து அறையில் இருந்த தேர்வு கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக, திருச்செந்துார் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள்,அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.சுந்தரின் மனைவி ஸ்டெல்லா, ஜோஸ்மின் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு, மகளும், மகனும் உள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை