பத்தாம் வகுப்பு முக்கிய தேர்வுகள், நேற்றுடன் முடிந்தன. பிறமொழி மாணவர்களுக்கான விருப்ப பாட தேர்வுடன், நாளை அனைத்து தேர்வுகளும் நிறைவடைகின்றன.பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு, மார்ச் 15ம் தேதி துவங்கியது. மொழி பாடங்களுக்கு நான்கு தேர்வுகளும், மூன்று முக்கிய பாடங்களின் தேர்வுகளும் நடந்தன.நேற்று, சமூக அறிவியல் பாடத்துடன், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்தன.
சமூக அறிவியல் வினாத்தாள் எளிதாக இருந்ததாக, மாணவ, மாணவியர் தெரிவித்தனர். பெரும்பாலான வினாக்கள், பாடப் புத்தகத்தின் பின்பக்க கேள்விகளில் இருந்தே வந்தன. இந்த தேர்வில், தமிழகம் முழுவதும் பறக்கும்படையினர் நடத்திய ஆய்வில், இரண்டு பள்ளி மாணவர் உட்பட, ஆறு பேர் முறைகேடு புகாரில் சிக்கினர். நாளை, விருப்ப மொழி பாட தேர்வு நடக்கிறது. அத்துடன், 10ம் வகுப்புக்கான அனைத்து தேர்வுகளும் முடிகின்றன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை