பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேர அட்டவணையை தவறாமல் பின்பற்ற, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, வரும், 4ல் துவங்குகிறது. விதிமுறையை தவறாமல் பின்பற்ற, தலைமை ஆசிரியர்களுக்கு, சுற்றறிக்கை மூலம் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, காலை, 9:45க்கு துவங்கி, மதியம், 1:15க்கு தேர்வு முடிவடைய வேண்டும். காலை, 9:45க்கு, முதல் மணி அடிக்கும். தேர்வறை கண்காணிப்பாளர், தேர்வர்களின் ஹால் டிக்கெட்டை சரிபார்த்து, வரிசையாக அனுமதிக்க வேண்டும். 9:50க்கு, விதிமுறையை விளக்க வேண்டும். 9:55க்கு, இரண்டாவது மணி ஒலித்தபின், சீல் வைக்கப்பட்ட வினாத்தாள் உறை, இரண்டு மாணவர்களிடம் காட்டப்பட்டு, அவர்களிடம் கையெழுத்து பெற்றதும், கட்டு பிரிக்க வேண்டும். 10:00க்கு, மூன்றாவது மணி ஒலித்தவுடன், வினாத்தாள் வழங்க வேண்டும்.
பத்து நிமிடங்கள், வினாத்தாளை வாசித்து பார்க்க அனுமதிக்கப்படுகிறது. அடுத்து, 10:10க்கு நான்காவது மணி ஒலித்தவுடன், மாணவர்களுக்கு விடைத்தாள் வழங்கப்படும். முகப்பு சீட்டில் உள்ள தங்களது புகைப்படம், பெயர், விவரங்களை சரிபார்த்து மாணவர்கள், அதில், கையெழுத்திட வேண்டும். அதற்காக ஐந்து நிமிடம் ஒதுக்கப்படும். அதன்பின், 10:15க்கு ஐந்தாவது மணி அடித்தவுடன், விடை எழுத அனுமதிக்கப்படுவர். மதியம், 1:15 மணி வரை, மூன்று மணி நேரம் தேர்வு எழுதலாம்.
ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கு ஒருமுறை, மணி ஒலிக்கப்படும்; தேர்வு நேரம் முடிவதற்கு, ஐந்து நிமிடம் முன், 1:10 மணிக்கு எச்சரிக்கை மணி ஒலிக்க விடப்படும். 1:15 மணிக்கு தேர்வு நேரம் முடிவடைந்த பின், மாணவ, மாணவியரிடம் உடனடியாக விடைத்தாள் பெறப்படும். விதிமுறையை தவறாமல் பின்பற்ற வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை