தமிழகத்தில், 2003 ஏப்., 1 முதல், அரசுப் பணியில் சேர்ந்துள்ள, அரசு அலுவலர்களிடம் இருந்து, பிடித்தம் செய்யப்பட்ட, ஓய்வூதிய பங்களிப்புத் தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும், அவற்றுக்கான வட்டித் தொகையும், அரசு கணக்கில் தனியே வைக்கப்பட்டுள்ளன.'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்திட வேண்டும்' என, பல்வேறு அரசு அலுவலர் சங்கங்கள் கோரி வருகின்றன.
'இந்த கோரிக்கை குறித்து தீவிரமாக ஆராயப்பட வேண்டும். எனவே, இது குறித்து ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைக்க, வல்லுனர் குழு அமைக்கப்படும். அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில், தக்க முடிவு எடுக்கப்படும்' என, சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா, பிப்.,19ல் அறிவித்தார்.அதன்படி, ஐந்து பேர் அடங்கிய வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை