பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரை, மேல் தளம் மற்றும் திறந்த வெளியில் தேர்வெழுத அனுமதிக்கக்கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுத்தேர்வுகளில் பங்கேற்போரில், கண் பார்வையற்ற, காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாதோர், டிஸ்லெக்சியா குறைபாடு, மனநலம் குறைபாடு, உடல் ஊனமுற்றோர் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.
எழுதுபவரை நியமித்துக்கொள்வது, கூடுதல் தேர்வு நேரம் உள்ளிட்டவைகளை, தலைமை ஆசிரியர் மற்றும் கல்வித்துறை அலுவலர்களின் பரிந்துரையில் சலுகை வழங்கப்பட்டு வந்தது.நடப்பு ஆண்டில், சலுகை பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பட்டியல்களை தேர்வுத்துறையே தயாரித்து, அதில் வழங்க வேண்டிய சலுகைகள் குறித்தும், மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களை, கட்டாயம் கீழ் தளத்தில் உள்ள வகுப்பறையில் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்.
மேல் தளம், திறந்தவெளி உள்ளிட்டவைகளுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்களை திறந்தவெளியில் அமர வைப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகை விபரங்களை முன்கூட்டியே, சம்பந்தப்பட்ட மாணவர், எழுதுபவர், கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு விளக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை