Ad Code

Responsive Advertisement

மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக ராமேஸ்வர முருகனுக்கு - கூடுதல் பொறுப்பு

இயக்குனர் பதவிக்கு புதிய அதிகாரி : பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக பிச்சை பணியாற்றினார். 2013ல் இப்பொறுப்புக்கு வந்த பிச்சை, நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். காலியான பணியிடத்தில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் இயக்குனர் ராமேஸ்வர முருகனுக்கு, கூடுதல் பொறுப்பு தரப்பட்டு உள்ளது. 


ஏற்கனவே, பாடநுால் கழக செயலராக இருந்த பிச்சைக்கு, கூடுதல் பொறுப்பு அளித்த பின்னரே, முழு பொறுப்பு தரப்பட்டது. அதே போல், ராமேஸ்வர முருகனுக்கும் விரைவில் முழு பொறுப்பு அளிக்கப்படும் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement