வரும் 15-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ள தண்டராம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு தேர்வின் முக்கியத்துவம் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.
பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை எஸ்.மாதவி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை ஆர்.கவிதா முன்னிலை வகித்தார். தமிழாசிரியை பி.கஸ்தூரி வரவேற்றார்.
முதுகலை தமிழாசிரியை கோவிந்தம்மாள், அறிவியல் ஆசிரியர்கள் எஸ்.மாதேஷ், ஏ.பிரான்சிஸ், கணித ஆசிரியை ஆர்.சாரதா, சமூக அறிவியல் ஆசிரியர் என்.தியாகராஜன் உள்ளிட்டோர் தேர்வை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள், மேல் படிப்பின் அவசியம், பெண்களின் கல்வி அவசியம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மாணவிகளுக்கு கருத்துக்களை வழங்கிப் பேசினர். தொடர்ந்து, மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை