மைனஸ் 45 டிகிரி வெப்பம், பனிக்கு கீழே 35 அடி ஆழம், ஆறு நாட்கள் என கற்பனை செய்து கூட பார்க்க முடியாத, மோசமான பருவநிலையில் சிக்கி, மீண்ட இந்திய ராணுவ வீரர் ஹனுமந்தப்பா, டாக்டர்களின் கடும் போராட்டத்திற்குப் பின் மரணத்தைத் தழுவினார்.
பாகிஸ்தான் எல்லையோரம் சியாச்சின் பனி மலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 இந்திய ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கினர். கடந்த 3ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. மீட்புப் பணியின் போது, கர்நாடகாவை சேர்ந்த ஹனுமந்தா மட்டும் உயிருக்கு போராடி கொண்டிருந்தார், உறை பனியில் 6 நாட்கள் போராடிய ஹனுமந்தப்பாவை மீட்டு ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இவரது மன உறுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். என டில்லி ராணுவ மருத்துவமனை டாக்டர்கள் போராடினர். ஆனால் அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது.
அவர் நேற்று முதல் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார் . இந்நிலையில் இவரது உடல் இன்று காலை 11.45 மணியளவில் பிரிந்தது . சியாச்சின் ஹீரோ ஹனுமந்தப்பா காலமானதை அடுத்து அவரது இழப்பு, நாடு முழுவதும் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை