மத்திய அரசு ஊழியர்களுக்கான, எல்.டி.சி., எனப்படும் விடுமுறை பயண சலுகை பெறுவதற்கான நெறிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. மேலும், விடுமுறை கால புகைப்படங்கள், தகவல்களை பகிர்ந்து கொள்ளும்படியும், ஊழியர்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
எல்.டி.சி., விண்ணப்ப நடைமுறை சிக்கலாக இருப்பதாக, மத்திய அரசு ஊழியர்கள் கூறி வந்தனர். விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை எனக்கூறி, எல்.டி.சி., நிராகரிக்கவும் படுகிறது. இதையடுத்து, இதற்கான நெறிமுறைகளை, மத்திய அரசு எளிமை படுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: மத்திய அரசு ஊழியர்கள், சொந்த ஊருக்கோ, வேறு இடங்களுக்கோ செல்லும் போது, எல்.டி.சி.,யின் கீழ், விடுமுறை பயணம் செய்ததற்கான டிக்கெட் செலவை பெறலாம். அதனை, அந்த மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும்.அதுபோன்ற இடங்களுக்கு செல்லும்போது கிடைக்கும் தகவல்கள், புகைப்படங்களை, சமூக வளைதளங்களில் பகிர்ந்து கொள்ளலாம். அலுவலகம் மற்றும் ஊழியர் அமைப்புகளின் பத்திரிகைகள், இணையதளங்களிலும், வெளியிடலாம்.
முந்தைய விதிமுறைப்படி, விடுமுறை எடுக்கும் ஊழியர், உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். தற்போது, விடுமுறை பொறுப்பாளரிடம் கடிதம் கொடுத்தாலே போதுமானது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை