தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத்தேர்வின் முதற்கட்டமாக, செய்முறை தேர்வு துவங்கியது.பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச், 4ல் பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று செய்முறைத் தேர்வு துவங்கியது. கணிதம், அறிவியல், கணினி அறிவியல், பொறியியல் மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவு என, 15 பாடப்பிரிவு மாணவர்களுக்கு, செய்முறை தேர்வுகள் நடந்தன.
எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு செய்முறை தேர்வில், மாணவர்களுக்கு தனித்தனியே வினாக்கள் வழங்கப்பட்டு, செய்முறை தேர்வுகள் நடந்தன. அனைத்து ஆய்வகங்களிலும், தேவையான உபகரணங்கள் மற்றும் ரசாயன பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. வரும், 22ம் தேதி வரை, செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை