ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் சத்தா கூறியதாவது:இந்த மொபைல் போனின் தயாரிப்பு செலவு, 2,500 ரூபாய். ஆனால், விற்பனையில் புதுமை, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வரி சலுகை போன்ற பல்வேறு காரணங்களால், இந்த போனை, 251 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், மொபைல் போன் உதிரி பாகங்களுக்கு, 13.8 சதவீதம், வரி சலுகை கிடைக்கிறது. அதாவது, ஒரு மொபைல் போனுக்கு, 470 ரூபாய் வரை சலுகை கிடைக்கிறது. மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது, ஒரு மொபைலுக்கு, 530 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம். நேரடி விற்பனையில்லாமல், 'ஆன்லைன்' மூலமாக விற்பதால், 460 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம்.
இவ்வாறு, பல்வேறு வகையில் சேமிக்கப்படும் தொகையை, வாடிக்கையாளருக்கே தருகிறோம். வரி சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுக்கு பின், 800 ரூபாய்க்கு இந்த போனை விற்க வேண்டும்; ஆனால், 251 ரூபாய்க்கு விற்கிறோம். மிகக் குறைந்த விலையில் விற்பதால், சந்தையில் மிகப் பெரிய இடத்தைப் பிடிப்போம். சந்தையில் மிகப் பெரிய இடத்தைப் பிடிக்கும்போது, பல்வேறு பொருட்களை நாங்கள் விற்க முடியும்; அந்த வகையில், இந்த இழப்பை ஈடுகட்ட முடியும். எங்கள் நிறுவனத்தை, 'ஆன்லைன் ஷாப்பிங் மாலாக' மாற்ற திட்டமிட்டுள்ளோம். அனைத்து பொருட்களும் எங்களிடம் கிடைக்கும். நாங்கள் மிகப் பெரிய லாபத்தை எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை