சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று நடைபெற்றது. நிதிக்குழு தலைவர் சந்தானம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கூறி இருப்பதாவது:–சென்னைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடத்தை மேல்நிலைப் பள்ளிகளில் தேர்ந்தெடுத்து படிக்கஅவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
அதனால் 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களை ஊக்குவிப்பதாக அறிவித்தால் மாணவ–மாணவியர்கள் அனைத்து பாடங்களையும் முழு கவனத்துடன் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.
எனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏதேனும் 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவ–மாணவியர்களுக்கு ரூ.10,000 ஊக்கப் பரிசும், பயிற்றுவித்த பாட ஆசிரியர்களுக்கும் தலா ரூ.5000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏதேனும் 3 பாடங்களில் மொத்த மதிப்பெண்கள் 595/600 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவ– மாணவியர்களுக்கு ரூ.10,000 ஊக்கப் பரிசு வழங்கப்படும். பயிற்றுவித்த பாட ஆசிரியர்களுக்கும் தலா ரூ.5000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை