Ad Code

Responsive Advertisement

விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

மிலாதுன் நபி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இன்றே, மாணவர்களுக்கு, மூன்றாம் பருவபாட புத்தகங்களை வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆண்டுதோறும், பள்ளிகளில் அரையாண்டுதேர்வு முடிந்து, மிலாதுன் நபி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை விடப்படும்.ஆனால், இந்த ஆண்டு மழை, வெள்ள பாதிப்பால் அரையாண்டு தேர்வு, ஜனவரிமாதத்துக்கு தள்ளி போடப்பட்டது. ஆனால், வழக்கம் போல் பண்டிகை காலவிடுமுறை டிச., 24 முதல் அறிவிக்கப்பட்டது. நேற்றுடன் விடுமுறைமுடிந்து, இன்று அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இன்று பள்ளிகள் திறந்ததும், 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும், மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அத்துடன், மூன்றாம் பருவ பாடங்களையும் நடத்த, ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement