தமிழகம் முழுவதும் மிகவும் குறைவான திறன் அடைவு உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்புத் திறன் மற்றும் கணிதத் திறன்களில் மாணவர்களது அடைவுத் திறனின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை அனுப்பும்படி தொடக்கக் கல்வி இயக்ககம் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து, சேலம் மாவட்டம் முழுவதும் அண்மையில் 21 ஒன்றியங்களின் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களும், தாம் பணிபுரியும் ஒன்றியம் தவிர்த்து பிற ஒன்றியங்களுக்குச் சென்று ஆய்வு செய்து அறிக்கை தர அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.
அதைத்தொடர்ந்து, ஒவ்வொரு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களும், மிகவும் குறைவான அடைவுத் திறன் உள்ள 5 பள்ளிகளுக்குச் சென்றனர்.
அங்கு 2ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் மாணவர்களிடம் தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்புத் திறன், கணித அடிப்படைச் செயல்பாடுகள் போன்றவற்றில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பள்ளிகளில் கற்றல் அட்டைகள், சுகாதார செயல்பாடுகள், வகுப்பு ஆசிரியர் மாணவர்களை குழுக்கள் அடிப்படையில் அமர்த்தியுள்ளனரா என்று ஆய்வுகள் மேற்கொண்டனர்.
நிகழ் கல்வியாண்டின் ஆரம்ப மாதமான ஜூன் முதல் டிசம்பர் வரையில் மாணவர் திறன்களில் முன்னேற்றம் அடைந்துள்ளனரா என்றும் ஆய்வு செய்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை