கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவிடும் வகையில், வங்கிகளின் நேரத்தை நீட்டித்தும், ஞாயிறு அன்றும் வங்கிகள் செயல்படவும் மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் பெரிதும் துயரத்திற்கு ஆளானார்கள். வீடுகளில் முடங்கிய அவர்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டனர். ஏ.டி.எம்.,களுக்கு சென்று பணம் எடுக்கலாம் என சென்ற போது அவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சியாக ஏ.டி.எம்., மையம்களும் தண்ணீரில் மூழ்கின. பணம் எடுக்க முடியவில்லை. இதனால் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்ட மக்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் திணறினர்.
இந்நிலையில், டில்லியில் பொது மற்றும் தனியார் வங்கிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனையில் தமிழகத்தில் கனமழை காரணமாக சேதமடைந்த ஏ.டி.எம்.களை சரிசெய்யவும், ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பவும், பொது மக்களுக்கு உதவிடும் வகையில் நடமாடும் ஏ.டி.எம்.,களை அமைக்க வேண்டும். வங்கிகளின் வேலை நேரத்தை நீட்டிக்க வேண்டும். ஞாயிறு அன்றும் வங்கிகள் செயல்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை