Ad Code

Responsive Advertisement

அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு தேதி மாற்றம்..

திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 24-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு, டிசம்பர் 23-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில், அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமை (டிச.22) தொடங்கி, 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. 


இந்நிலையில், டிசம்பர் 24-ம் தேதி மிலாடி நபியையொட்டி, அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் நடைபெற இருந்த தேர்வு ஒரு நாள் முன்னதாக புதன்கிழமை (டிச.23) நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 


இதேபோல, டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தேர்வு எதுவும் இல்லை. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் டிசம்பர் 23-ம் தேதி நடைபெறும் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்...

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement