திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 24-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு, டிசம்பர் 23-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில், அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமை (டிச.22) தொடங்கி, 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், டிசம்பர் 24-ம் தேதி மிலாடி நபியையொட்டி, அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்றைய தினம் நடைபெற இருந்த தேர்வு ஒரு நாள் முன்னதாக புதன்கிழமை (டிச.23) நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதேபோல, டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தேர்வு எதுவும் இல்லை. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் டிசம்பர் 23-ம் தேதி நடைபெறும் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்...
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை