'பள்ளிகளில், அரையாண்டு தேர்வு நடத்தாமல், ஆண்டு இறுதித்தேர்வு மட்டும் நடத்த வேண்டும்' என, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கம் சார்பில், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், கோரிக்கை மனு அளித்த பின், சங்கத் தலைவர் அருமைநாதன் கூறியதாவது:
மழை வெள்ளத்தால், தமிழகத்தில், பல மாவட்டங்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதி மக்கள், பெரும் பொருளாதார சேதத்தை சந்தித்துள்ளனர். எனினும், தனியார் பள்ளிகள், 'கல்விக் கட்டணத்தை உடனடியாக கட்ட வேண்டும்' என, நிர்ப்பந்தம் செய்வதாக, பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து, தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இழந்த பள்ளி நாட்களை சரி செய்வது குறித்து திட்டமிட, பெற்றோர், ஆசிரியர், மாணவர் அடங்கிய ஆலோசனை குழுவை அமைக்க வேண்டும். மழையால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரையாண்டு தேர்வை ரத்து செய்ய வேண்டும். பாடங்களை குறைத்து, ஆண்டு இறுதித் தேர்வு மட்டும் நடத்த வேண்டும்.
மாணவர்கள், சென்னை மாநகர பேருந்தில் பயணம் செய்ய, நவ., 15 முதல், டிச., 15 வரை வாங்கிய பயண அட்டைகளை, விடுமுறை காரணமாக பயன்படுத்த இயலவில்லை. எனவே, அந்த அட்டைகளின் காலக்கெடுவை, ஜன., 15 வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை