நீண்ட விடுமுறைக்கு பின், சென்னை, திருவள்ளூர், கடலுார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளில், மாணவியருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு, புதிய சான்றிதழ் வழங்கும் முகாமும் நேற்று துவங்கியது.
சென்னை, எழும்பூர் மாநில மகளிர் பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா கூறியதாவது: பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, உளவியல் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தகம், சீருடை, சைக்கிள், லேப் - டாப் போன்ற அனைத்தும் வழங்கப்படுகின்றன. எனவே, தேர்வை நினைத்து, மாணவர்கள்பயப்பட வேண்டாம்; தேவையான அனைத்து சலுகைகளையும் அரசுவழங்கும் பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு, கவுன்சிலிங் குழு ஆலோசனை வழங்கும். குறைந்தபட்ச தேர்ச்சிக்கான கற்றல் வழிகாட்டி நுால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
சனிக்கிழமை வகுப்புகள் பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, கூடுதல் நேரம் ஒதுக்கி, சிறப்பு வகுப்பு நடத்தப்படும். விடுமுறை நாட்களை ஈடுசெய்ய, வகுப்பு நேரத்தை, பள்ளிகள் தேவைக்கு ஏற்ப அதிகரித்து கொள்ளலாம். சனிக்கிழமை வகுப்புகள் நடத்துவது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் முடிவு செய்யலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை