சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம், நேற்று துவங்கியது; 20 நடமாடும் மருத்துவ குழுக்கள், இந்த பணியில் ஈடுபட்டு உள்ளன.மழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களில், நேற்று, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
மழை பாதிப்பால், மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படலாம் என்பதால், பொது சுகாதாரத் துறை, பள்ளிகளில் சிறப்பு முகாம்களை துவக்கி உள்ளது. 20 நடமாடும் சிறப்பு மருத்துவக் குழுக்கள், இப்பணியில் ஈடுபட்டுள்ளன. 'தினமும், 40 பள்ளிகளில் முகாம் நடத்தப்படும். மாணவர்களுக்கு சிகிச்சை அளிப்பதோடு, தரமான குடிநீர் தரப்படுகிறதா, பள்ளி வளாகம் சுத்தமாக உள்ளதா என, இக்குழு ஆய்வு செய்யும். காய்ச்சிய குடிநீர் பருகுதல், சுற்றுப்புற துாய்மை குறித்து, மாணவர்களுக்கு ஆலோசனை தரப்படும்' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை