Ad Code

Responsive Advertisement

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 30 ரூபாய் ரீசார்ஜ் செய்து விடும் ஏர்டெல்

வரலாறு காணாத கன மழையால் பாதிக்கப்பட்டு ரீசார்ஜ் கடைகளும் இல்லாமல்சரிவர இணைப்பும் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வரும் சென்னை வாசிகளுக்காக முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.இதன்படி, 


சென்னையில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் 30 ரூபாயை மினிமம் பேலன்சாக ரீசார்ஜ் செய்து விடும். (இல்லாத பட்சத்தில் 52141 என்ற எண்ணை அழைக்கலாம்.) இது மட்டுமின்றி இந்த சிறப்பு பேக்கேஜ் மூலம் 10 நிமிடங்கள் (2 நாட்கள் வேலிடிட்டி) ஏர்டெல்-ஏர்டெல் பேசிக்கொள்ளலாம். மேலும் 50 MB இண்டர்நெட் பேக்கும் இதனுடன் தரப்படுகிறது. இந்த 30 ருபாய் பணத்தை ரீசார்ஜ் கடைகள் திறக்கப்பட்ட பின் 10 ரூபாய் கடன் வாங்கும் போது கழிக்கப்படுவது போல் ரீசார்ஜ் செய்த பின்னர் கழிக்கப்படும்.மின்சார வசதி இல்லாததால் ஏற்பட்ட தடங்கல்களுக்கு வருந்துவதாகவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement