Ad Code

Responsive Advertisement

3 நாட்களுக்கு கனமழை தொடரும் BBC கணிப்பு 50 செ.மீ.,

'வங்க கடலில், நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்னும், மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

'தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், (இன்று) புதன்கிழமை, மிக, மிக கனமழை பெய்யும்' என, எச்சரிக்கப்பட்டு உள்ளது. வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்ட அறிக்கை:தென் மேற்கு வங்க கடலில், உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை, இலங்கை அருகே, வட தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் இடையே நிலை கொண்டு உள்ளது.

இதனால், டிச., 5 வரை 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும்.

டிச., 2: தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும்.டிச., 3: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மிக, மிக கனமழை பெய்யும். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.

டிச., 4, 5: தமிழகம், புதுச்சேரியில் மிக கனமழை பெய்யும்.சென்னையில் அடுத்த, 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். பரவலாக, மிக கனமழை பெய்யும். காற்று மிக பலமாக வீசும். கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8:30 மணி வரை, 4 செ.மீ., மழை பெய்தது. காலை, 8:30 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, 14 செ.மீ., மழை பதிவானது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், குறைந்தபட்ச வெப்ப நிலை, 23 டிகிரி செல்சியஸ். சமவெளி பகுதியில், தர்மபுரியில் மிக குறைவான வெப்ப நிலை பதிவானது. அங்கு அதிகபட்ச வெப்பநிலையே, 19 டிகிரி செல்சியஸ் தான். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

பி.பி.சி., அறிக்கை:

லண்டன் பி.பி.சி., செய்தி நிறுவனம், சென்னை மழை குறித்து, நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'டிச., 1, 2ல், சென்னையில் கனமழை பெய்யும். இந்த, இரண்டு நாட்களில் மட்டும், 50 செ.மீ., மழை, சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பதிவாகும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement