வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் நிலவிவருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் தென் மேற்கு திசையில் இலங்கையை ஒட்டிய பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் தென் மாவட்டங்களில சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று செங்கோட்டையில் 60 மிமீ மழை பெய்துள்ளது. சாத்தூர் 40மிமீ, முதுகளத்தூர், சிவகங்கை 30 மிமீ, கழுகுமலை, புதுக்கோட்டை 20 மிமீ மழை பெய்துள்ளது.
இந்நிலையில், மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்துள்ளதால் தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும். இது தவிர ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை