பள்ளி மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கும் பணியில், 10 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில், நோய் பாதிப்புகளைத் தடுக்க, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மாவட்டங்களில், நீண்ட விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறந்துள்ளன.
வெள்ள பாதிப்பால், மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதால், பள்ளிகளுக்கே சென்று, மனநல ஆலோசனை வழங்கும் பணியை, அரசு துவக்கி உள்ளது. மனநல டாக்டர்கள் கொண்ட, 10 நடமாடும் மருத்துவக் குழுக்கள், இந்த பணியில் ஈடுபட்டுள்ளன. வெள்ள பாதிப்பால் ஏற்பட்ட மன குழப்பம் தீரவும், அதிக மதிப்பெண் பெறும் வகையிலும், ஆலோசனைகள் தரப்படுகின்றன. ஒரு வாரத்திற்கு, இது தொடரும் என, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இது தவிர, நிவாரண முகாம்களில் தங்கி உள்ளோருக்கும், மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை