அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் பயிற்சி மைய இயக்குநர் டாக்டர் மோகன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மாணவர்கள் வகுப்பறையை விருப்பமுடன், ஆர்வமுடன் கவனிக்கும் அளவிற்கு ஆசிரியர்கள் வகுப்பிற்கு தகுந்த பயிற்சியுடன் செல்ல வேண்டும். ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும்போது எந்த கர்வமும் கொள்ளக் கூடாது. மாணவர்கள் வகுப்பை விருப்பத்துடன் அனுபவிக்கும் விதத்தில் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும். ஆசிரியர்கள் திட்டமிட்டு பயிற்சியுடன் வகுப்பறைக்குச் சென்றால்தான், சிறந்த கல்வித் தரத்தைத் தர இயலும் என்றார் அவர்.
மாணவர்களின் தரம் உயர ஆசிரியர்கள் தரம் உயர வேண்டும் என்றும், அதற்கான பயிற்சிகளை அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர்களுக்கு வழங்கி வருகிறது என்றும் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் பயிற்சி மைய இயக்குநர் டாக்டர் மோகன் கூறினார்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பிருந்தா, ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை