கோவை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, மொபைல்போனில் விளையாடிக் கொண்டிருந்த மாணவியர் ஐந்து பேர், கையும் களவுமாக சிக்கினர்.
பெற்றோர் கூறுகையில், 'குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வதற்காக மொபைல்போன் கொடுத்துள்ளோம். மாணவியரை ஸ்டீஸ் ஸ்கேலால் அடித்து, மொபைல்போனை பறிமுதல் செய்துள்ளனர்' என்றனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், 'பள்ளிக்கு மொபைல்போன் கொண்டு வரக்கூடாது என, பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளோம். அதையும் மீறி மொபைல்போன் கொண்டு வந்ததுடன், வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது, போனில் பேசியுள்ளனர்; விளையாடியுள்ளனர். இதனால், பாடம் நடத்துவதும், மற்ற மாணவிகள் கல்வி கற்பதும் பாதித்தது' என்றனர்.
மாநகராட்சி கல்வி அலுவலர் ரவி, 54வது வார்டு கவுன்சிலர் சீதாராமன் முன்னிலையில், மாணவியருக்கும், பெற்றோருக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. இதையடுத்து, மாணவியர், செய்த தவறை ஒப்புக்கொண்டனர். பெற்றோரும் சமாதானம் அடைந்தனர். மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து, மொபைல்போன்களை பெற்றுச்செல்லுமாறு, மாநகராட்சி கல்வி அலுவலர் அறிவுறுத்தினார்.
மாநகராட்சி கல்வி அலுவலர் கூறுகையில், ''பள்ளிக்கு மொபைல்போன் கொண்டு வர அனுமதியில்லை. மாணவர்களுக்கு மொபைல்போன் வாங்கிக்கொடுப்பதால் கல்வி பாதிக்கும் என்பதை பெற்றோர் உணர வேண்டும். மொபைல் போன் தடையை கடுமையாக கடை
பிடிக்க ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெற்றோர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்,'' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை