'டெங்கு' காய்ச்சல் தடுப்புக்காக, 'ஆடாதொடை மணப்பாகு' இனிப்பு கஷாயம், தமிழக அரசு மருத்துவமனைகளில், இன்று முதல் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு சித்த மருத்துவர் சங்கத் தலைவர் பிச்சையா குமார், செயலர் தமிழ்க்கனி ஆகியோர் நேற்று கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில், ஆங்கில, சித்த மருந்துகளை இணைத்து தருவது போல், தனியார்மருத்துவமனைகளிலும்நடைமுறைப்படுத்தினால், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தலாம். சித்த மருத்துவத்தை, 'நம்பிக்கை இல்லாத, காலாவதியான மருத்துவ முறை' என, அலோபதி டாக்டர்கள் விமர்சிப்பதை கைவிட வேண்டும்.
'மூன்று நாட்களில் நோய் குணமாகும்' எனக்கூறி, போலி மருத்துவர்கள் பலர் மக்களை திசை திருப்புகின்றனர்; மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். போலி டாக்டர்களை தடுக்க, சித்தா டாக்டரை உள்ளடக்கி, வட்டார அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் என, கோரியுள்ளோம். விரைவில், தமிழக அரசு இந்தக் குழுவை அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை