மாற்றுத்திறனாளி, நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் சிறப்பு சலுகையில் 10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத மருத்துவ சான்றிழுடன் விரைந்து விண்ணப்பிக்க வேண்டும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.
சான்றிதழ் பெற்று தலைமையாசிரியர்களிடம் அளிக்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.
விண்ணப்பம்: பிளஸ் 2 மாணவர்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள், 10ம் வகுப்பு மாணவர்கள் மாவட்டக்கல்வி அதிகாரிகளிடம், தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பத்தை தலைமையாசிரியர்கள் பரிந்துரை கடிதத்துடன் விரைந்து சமர்ப்பிக்க வேண்டும்.
அது தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டு சிறப்பு சலுகையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.டாக்டர் சான்று: மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாற்றுத்திறனாளிகள், இதர நோய் குறைபாடு உடைய மாணவர்களுக்கு வேறொரு ஆசிரியர் மூலம் தேர்வு எழுதுவது, அதற்காக கூடுதலாக ஒருமணி நேரம் ஒதுக்குவது, ஏதாவது ஒரு மொழிப்பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
விபத்தில் சிக்கி காயமடைவோர் தவிர மற்றவர்கள் கடைசி நேரத்தில் விண்ணப்பிக்கும்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன. அரசு டாக்டர்களிடம் உரிய சான்றிதழ் பெற்று அம்மாணவர்கள் தற்போதே சிறப்பு சலுகையில் தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,”என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை