தமிழக பள்ளிகளில் கல்வித் தரம் மேம்பாடு, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் பாலமுருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் கலந்து கொண்டு பேசியது:
2015-16 கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில், மாவட்டம் தோறும் சென்று அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நேரில் சந்தித்து பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் எளிமையாக கற்று தேர்ச்சி பெறுவதற்காக கையேடு வழங்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த காலாண்டு மதிப்பெண்களின் அடிப்படையில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களிடம் மீள் ஆய்வு நடத்தப்பட்டது.
கல்வித் தரத்தையும், தேர்ச்சி விகிதத்தையும் கூட்டுவதற்கு பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. சேலம் மாவட்டம் கடந்த ஆண்டில் 90 சதவீத அளவுக்கு தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. வரும் கல்வியாண்டில் 95 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி விகிதத்தை எட்ட ஆசிரியர்கள் உறுதி தெரிவித்துள்ளனர் என்றார்.
கூட்டத்தில், அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 20 பேர், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 26 பேர், 46 பட்டதாரி ஆசிரியர்கள், 95 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் 26 பேர் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை