''நாட்டிலேயே முதலிடம் வகிக்கும், தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு, ஐந்து ஆண்டுகளில், 86 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபீதா தெரிவித்தார்.
விழாவிற்கு தலைமை தாங்கிய, துறையின் முதன்மை செயலர் சபீதா பேசியதாவது:
தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு, ஐந்து ஆண்டுகளில், 86 ஆயிரம் கோடி ரூபாயை, முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். தேசிய விதிமுறைப்படி தொடக்கப் பள்ளியில், 30 மாணவர்; நடுநிலைப் பள்ளியில், 35; உயர்நிலைப் பள்ளியில், 40; மேல்நிலைப் பள்ளியில், 45 பேருக்கு, ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால், 22 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலை ஏற்பட்டுஉள்ளது. பள்ளிக்கல்வித் துறையில், தமிழகம் முதலிடத்தில் இருக்க இதுவே காரணம்.போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டதால், பள்ளிக்கு செல்லாமல் இருந்த, 57 ஆயிரம் குழந்தைகளில், 48 ஆயிரம் பேர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
துறை அமைச்சர் வீரமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சிறந்த நுாலகர்களுக்கு எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கி பேசினார். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை