மத்திய நிதியுதவி பெறும் வகையில், 12 தமிழக கல்லுாரிகளுக்கு, 'நாக்' அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது.பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யின் நிதி மற்றும் சலுகைகளை பெற, 'நாக்' எனப்படும் தேசிய தர அங்கீகார நிறுவனத்தின் தகுதி சான்றிதழ் பெற வேண்டும்.
கல்லுாரிகளின் உள் கட்டமைப்பு, மாணவர் - ஆசிரியர் விகிதம், பாடப்பிரிவுகள், தேர்ச்சி, நுாலகம் என, ஏழு வகை வசதிகளின் படி, 'நாக்' அங்கீகாரம் தரப்படுகிறது.
இந்த கல்வி ஆண்டில், 12 தமிழக கல்லுாரிகள் உட்பட, நாடு முழுவதும், 146 கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் தர, மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.அதன்படி சென்னையில் உள்ள, ராணிமேரி, காயிதேமில்லத் (ஆண்கள்), திருத்தங்கல் நாடார் கல்லுாரிகள் மற்றும் சத்தியபாமா அறிவியல் தொழில்நுட்பப் பல்கலை;
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லுாரி; மதுரை விவேகானந்தா, உதகை அரசு ஆர்ட்ஸ், செய்யார் இந்தோ அமெரிக்கன், கோவை ஸ்ரீராமகிருஷ்ணா (பெண்கள்) கல்லுாரிகள்; நாமக்கல் ஞானமணி தொழில்நுட்ப கல்லுாரி, விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரி, ஈரோடு நந்தா பிசியோதெரபி கல்லுாரி ஆகிய வற்றுக்கு, நாக் அந்தஸ்து கிடைக்கிறது
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை